follow the truth

follow the truth

October, 9, 2024
HomeTOP1வாகன இறக்குமதி குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை

வாகன இறக்குமதி குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை

Published on

ஒக்டோபர் மாதத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்த போதிலும் அது தொடர்பில் தற்போது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ் தெரிவித்தார்.

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் பேருந்துகள் மற்றும் பாரவூர்திகள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என வதந்திகள் பரவி வருவதாகவும், ஆனால் அவ்வாறான சுற்றறிக்கையோ அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆவணமோ எந்தவொரு அரசாங்க நிறுவனத்தினாலும் இறக்குமதிக் கட்டுப்பாட்டாளர் அல்லது வங்கிகளுக்கு அனுப்பப்பட்டதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்பதை தமது சங்கத்தினால் அறிய முடிந்தது என்றார்.

2020 ஆம் ஆண்டு வாகனங்கள் முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட அதே விலையில் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என நம்ப முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாகனங்களை இறக்குமதி செய்தாலும் விலையில் பெரிய அளவில் சரிவு ஏற்படாது என்றார்.
கடந்த 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூபாயுடன் ஒப்பிடுகையில் டொலரின் மதிப்பு 80 வீதத்தால் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுவரெலிய தபால் நிலைய கட்டடம் குறித்து அறிவித்தல்

நுவரெலியா தபால் நிலையம் மற்றும் அது இயங்கும் சொத்துக்கள் தபால் திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக மாத்திரம் பாதுகாக்கப்படும் எனவும், வேறு...

மைக் சின்னத்தில் ரஞ்சன் தலைமையில் புதிய கட்சி

ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி இன்றைய தினம் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. இலங்கையின் முன்னணி நடிகரும்...

ஞானசார தேரரை கைது செய்ய உத்தரவு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கோட்டை நீதவான் திருமதி...