நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டுள்ள கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவொன்று வெளிநாடு செல்லத் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், அவர்கள் வெளிநாடு செல்வதை தடுத்து தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் சீராக்கல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரினால் இந்த சீராக்கல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
சட்டத்திற்கு முரணாக புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறி செயற்பட்டதன் ஊடாக கலால் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் இந்த சீராக்கல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.