follow the truth

follow the truth

October, 8, 2024
HomeTOP1கலால் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோருக்கு எதிராக சீராக்கல் மனுத்தாக்கல்

கலால் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோருக்கு எதிராக சீராக்கல் மனுத்தாக்கல்

Published on

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டுள்ள கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவொன்று வெளிநாடு செல்லத் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், அவர்கள் வெளிநாடு செல்வதை தடுத்து தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் சீராக்கல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரினால் இந்த சீராக்கல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

சட்டத்திற்கு முரணாக புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறி செயற்பட்டதன் ஊடாக கலால் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் இந்த சீராக்கல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பதவி விலகிய மாவை சேனாதிராஜா

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவி உள்ளிட்ட பொறுப்புக்களில் இருந்து விலகுவதாக மாவை சேனாதிராஜா கட்சியினருக்கு அறிவித்துள்ளார். கட்சியின்...

தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு

2024 ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையவிருந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல...

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும்...