follow the truth

follow the truth

October, 7, 2024
HomeTOP2சஜித்தை பிரதமராக்கி, அநுரவுடன் இணைந்து செயற்பட தயார்

சஜித்தை பிரதமராக்கி, அநுரவுடன் இணைந்து செயற்பட தயார்

Published on

பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்தி சஜித் பிரேமதாசவை பிரதமராக்கிய பின்னர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்படத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொறியியலாளர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

அநுர குமார திசாநாயக்க மோசடி செய்பவர்களை திருடர்களை பிடிக்க செயல்பட்டால், வெளிநாட்டில் மறைத்து வைத்துள்ள பணத்தை கொண்டுவந்தால், நிபந்தனையின்றி ஆதரவளிக்க நாம் தயார் என தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை இல்லாத நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எனவும், பெரும்பான்மை பெற்றுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கும் எனவும் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

இந்த நேரத்தில் அனைவரும் ஒன்றுபடுவது மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்களை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக் கொள்ளாதிருக்க கட்சி முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாத 06 கட்சிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தலில் போட்டியிட முடியாத அரசியல் கட்சிகளின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு...

2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்த வருடம் மைக்ரோ ஆர்.என். ஏ வை கண்டுபிடித்ததற்காக...

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் – வாக்காளர்களுக்கான அறிவித்தல்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வாக்குளிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.