follow the truth

follow the truth

October, 7, 2024
HomeTOP1ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்புமனு தாக்கலுக்காக குழு நியமனம்

ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்புமனு தாக்கலுக்காக குழு நியமனம்

Published on

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வந்துள்ள நபர்களுக்கு பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் பணிப்புரையின் பிரகாரம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான டினல் பிலிப், நளின் திஸாநாயக்க மற்றும் எஸ்.டி.ஜெயநாத ஆகியோர் மேற்படி குழுவில் நியமிக்கப்பட்டுள்ள ஏனைய உறுப்பினர்களாவர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாத 06 கட்சிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தலில் போட்டியிட முடியாத அரசியல் கட்சிகளின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் இராஜினாமா

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்ன தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி...

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் – வாக்காளர்களுக்கான அறிவித்தல்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வாக்குளிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.