follow the truth

follow the truth

October, 7, 2024
HomeTOP1நட்டஈட்டினை வழங்கிய நிலந்த ஜயவர்தன?

நட்டஈட்டினை வழங்கிய நிலந்த ஜயவர்தன?

Published on

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், 75 மில்லியன் ரூபா நட்டஈட்டினை வழங்கியுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு அண்மையில் விடுத்த அறிவித்தலின் பிரகாரம் நிலந்த ஜயவர்தன இன்று (07) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை முன்கூட்டியே புலனாய்வுத் தகவல் கிடைத்தும் தடுக்கத் தவறியமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை பூர்த்தி செய்யாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இழப்பீடு வழங்கியதை உறுதி செய்யும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவித்து மதியம் 1.30 மணி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்து வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் விசேட அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்திகள் தொடர்பாக வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு...

தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி ஒருவர் உயிரிழப்பு

தாமரை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கையின் சுற்றுலா,வலுசக்தி மற்றும் சிறு தொழில்துறைகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார...