follow the truth

follow the truth

October, 6, 2024
HomeTOP1ஜனாதிபதித் தேர்தல் - இதுவரை பிரச்சார செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்கள்

ஜனாதிபதித் தேர்தல் – இதுவரை பிரச்சார செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்கள்

Published on

செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 34 வேட்பாளர்கள் இதுவரை தமது தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இன்னும் வழங்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய 38 வேட்பாளர்களில், 4 வேட்பாளர்கள் மட்டுமே தங்களது பிரசார செலவு அறிக்கையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செலவுக் கட்டுப்பாடு சட்டத்தின்படி, எதிர்வரும் 13ம் திகதிக்குள் பிரசார செலவு அறிக்கைகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் தமது பிரசார செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின்னர் அறிக்கைகள் வழங்கப்பட்டாலும் அது சட்டவிரோதமானதாக கருதப்பட்டு தண்டிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்கள் தொகை கணக்கெடுப்பு – தகவல் சேகரிப்பு நாளை முதல் ஆரம்பம்

15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நடவடிக்கை நாளை (07)...

இலங்கை சிறையில் இருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று விடுவிப்பு

இலங்கையில் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த...

அநுராதபுரம் முதல் மஹவ ரயில் சேவையை முன்னெடுப்பதில் தாமதம்

வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான ரயில் பாதையின் திருத்தப்பணிகள் மேலும் தாமதமாகும் என ரயில்வே...