நாட்டின் பல பகுதிகளில் இன்று அரை மணி நேரம் மின்தடை ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, மாலை 6 மணி முதல் இரவு 9:30 மணி வரையிலான காலப்பகுதியில் ஏதெனுமொரு அரை மணி நேரம் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டரை மின் இணைப்புடன் இணைக்கும் வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேநேரம், இந்த மின்தடை நாளையும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.