follow the truth

follow the truth

April, 25, 2025
Homeவிளையாட்டுஇந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கனவில்தான் நடக்கும் - ரமீஸ் ராஜா

இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கனவில்தான் நடக்கும் – ரமீஸ் ராஜா

Published on

இந்திய கிரிக்கெட் அணி, பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரை (2-0) முழுமையாக கைப்பற்றியது.

கான்பூரில் நடந்த கடைசி டெஸ்டின் முதல் 3 நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டது. அதன்பின் போட்டி தொடங்கியபோது இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது. இதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18-வது டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கனவில்தான் நடக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்;

“.. பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் பலம் வாய்ந்த அணியாக இந்தியா திகழ்கிறது. இந்திய மண்ணில் விளையாடும் எந்த அணிக்கும் அங்கு டெஸ்ட் தொடரை வெல்வது கனவாக மட்டுமே இருக்கும். அது கனவில்தான் நடக்கும். சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பது தற்போது ஒரு கனவாக மாறியுள்ளது.

இதுபோன்ற வெற்றிகரமான அணிக்கு கடினமான நேரத்தை கொடுக்க பங்களாதேஷ் நிறைய செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இந்தியாவுக்கு சவால் விடும் திறன் பங்களாதேஷ் அணிக்கு இல்லை…”

சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்த பங்களாதேஷ் அணி டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...

டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டி இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ்...

மீண்டும் மோதும் சென்னை – மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல்...