20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்று குறைந்தபட்சம் 3 மாதங்களை கடந்துள்ள 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மூன்றாம் கட்ட தடுப்பூசியை பெறறுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டில் உள்ள எந்தவொரு தடுப்பூசி நிலையத்திற்கு சென்று பூஸ்டர் டோஸினை பெற்றுக் கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.