தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்ணேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் ஒரே நாட்டின் பிரஜைகளாக செயற்படக்கூடிய அரசியல் சூழ் நிலையை உருவாக்கும் நோக்கிலான முதலாவது கலந்துரையாடல் முன்னதாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது