நாட்டின் பல பகுதிகளில் அரை மணி நேரம் மின்சாரத் தடை ஏற்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மின் தடை தொடரும் என தெரிவித்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 9:30 மணி வரையான நேரப்பகுதிக்குள் நாட்டின் பல பகுதிகளில் 30 நிமிடங்கள் மின்வெட்டு ஏற்படலாம்” என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.