follow the truth

follow the truth

October, 2, 2024
HomeTOP1அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published on

நிர்ணயிக்கப்பட்ட பஸ் கட்டணத்தை விட பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் அறவிடும் பஸ்கள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அதிக கட்டணம் அறவிடும் பஸ்கள் தொடர்பில் முறையிட 1955 அல்லது 071 25 95 555 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக கட்டணம் அறவிடும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

குறைக்கப்பட்ட டீசல் கட்டணத்துக்கு ஏற்ப பஸ் பயணக் கட்டணம் குறைக்கப்படவில்லை எனவும் பெரும்பாலான பஸ்களில் ஆரம்ப பயணக் கட்டணத்துக்கு ஏற்ப சரியான வகையில் மிகுதி பணம் வழங்கப்படுவதில்லை எனவும் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நேற்று(01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் 4.24 சதவீதமாக பஸ் கட்டணம் குறைக்கப்பட்டிருந்த நிலையில் ஆரம்ப கட்டணம் 27 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்

சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ.ஷென்ஹொங் (Qi Zhenhong) இன்று (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில்...

காணாமல் போன தந்தையையும் மகளையும் கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

நீர்கொழும்பில் தந்தையும் மகளும் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் 14 ஆம்...

மதுபான உற்பத்தியாளர்கள் வரி நிலுவைத் தொகையை செலுத்த கால அவகாசம்

மதுபான உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி...