follow the truth

follow the truth

September, 30, 2024
HomeTOP2பாதுகாப்புடைய இடத்திற்கு மாற்றப்பட்டார் அயதுல்லா அலி கொமேனி

பாதுகாப்புடைய இடத்திற்கு மாற்றப்பட்டார் அயதுல்லா அலி கொமேனி

Published on

இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில் ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஈரானிய பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலிய முகவர்களின் ஊடுருவல் தொடர்பில் ஈரான் அதிகாரிகள் இடையே கவலை அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நஸ்ரல்லாவின் படுகொலையை அடுத்து கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தத் தியாகியின் இரத்தத்திற்கு பதில் அளிக்கப்படும்’ என்று எச்சரித்திருந்தார்.

ஏற்கனவே ஹிஸ்புல்லா அமைப்பின் வோக்கி டோக்கி மற்றும் பேஜர் உபகரணங்கள் வெடித்த சம்பவங்களை அடுத்து அனைத்து தொடர்பாடல் சாதனங்களையும் சோதனைக்கு உட்படுத்த பாரிய அளவான நடவடிக்கை ஒன்றை ஈரான் புரட்சிக் காவல் படை முன்னெடுத்துள்ளது. இந்த உபகரணங்கள் பெரும்பாலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை அல்லது சீனா மற்றும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்று ஈரான் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

நேபாளத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் தலைநகர் காத்மண்டுவில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் காரணமாக தங்களின்...

ராஜபக்ஷர்கள் திருடர்கள் என்றால் உடனடியாக சட்டத்தினை அமுல்படுத்தக் கோரிக்கை

ராஜபக்ஷர்கள் திருடர்கள் என்றால் உடனடியாக சட்டத்தினை அமுல்படுத்தி அதன் உண்மைத்தன்மையினை நிரூபிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர்...

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே ஒரே நிலைப்பாடு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் நாட்டுக்கு நல்லது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும்,...