மனித உரிமை மீறல்களுக்காக மேலும் இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
11 மாணவர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் மிருசுவிலில் 8 தமிழர்களை வெட்டியும், சுட்டும் கொன்ற கொடூர குற்றவாளியான சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கே, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆண்டனி ஜே. ப்ளிங்கன் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, நேற்று அமெரிக்கா வெளியிட்ட இந்த அறிவிப்பில், உலகளவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இராணுவம், பொலிஸ் பிரிவுகளை சேர்ந்த பலர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.