follow the truth

follow the truth

September, 30, 2024
HomeTOP1இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை

Published on

மனித உரிமை மீறல்களுக்காக மேலும் இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

11 மாணவர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் மிருசுவிலில் 8 தமிழர்களை வெட்டியும், சுட்டும் கொன்ற கொடூர குற்றவாளியான சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கே, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆண்டனி ஜே. ப்ளிங்கன் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, நேற்று அமெரிக்கா வெளியிட்ட இந்த அறிவிப்பில், உலகளவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இராணுவம், பொலிஸ் பிரிவுகளை சேர்ந்த பலர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி செயலகம் அருகில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பயன்படுத்தியோர் பட்டியல் வெளியீடு

ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின்...

வரலாற்றில் முதல் முறையாக சாதாரண தர பரீட்சையில் சாதனை படைத்த கிழக்கு மாகாணம்

வரலாற்றில் முதல் முறையாக 2023ம் கல்வியாண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கிழக்கு மாகாணம் ஆறாம் இடத்தில் இருந்து...

பலத்த மின்னலுடன் கூடிய மழைக்கான வானிலை எச்சரிக்கை

மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்,...