விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேவை பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் மேன்முறையீடு செய்ய லண்டன் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜுலியன் அசாஞ்சே நாடு கடத்தப்பட்டால் அமெரிக்க சிறையில் தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பு காணப்படுவதாகத் தெரிவித்து முன்னதாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
குறித்த தீர்ப்புக்கு எதிராக அமெரிக்க நீதி மற்றும் சட்டத் துறையினர் முன்வைத்த மேன்முறையீட்டிற்கமையவே இவ்வாறு மேன்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது