follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP1ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு

Published on

நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

நாளை மறுநாள் காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் பிரசாரங்கள் நேற்று (18) நள்ளிரவு 12:00 மணியுடன் நிறைவடைந்ததோடு, தேர்தல் நடைபெறும் நேரம் வரையான காலப்பகுதி அமைதியான காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் எந்தவிதமான பிரசார நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறும் எந்தவொரு தரப்பினரையும் கைது செய்து சட்டத்தை அமுல்படுத்தும் திறன் பொலிஸாருக்கு இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

ஒரு வாக்காளர் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் போது எவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விளக்கினார்.

“அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டுடன் அடையாள அட்டையையும் எடுத்துச் செல்ல வேண்டும். மக்கள் பதிவுத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றை நீங்கள் எடுத்துச் செல்லலாம். கிராம அதிகாரி மூலம் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையும் வாக்களிக்க செல்லுபடியாகும்.”

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் அல்லது உங்கள் விருப்பங்களைக் குறிக்கலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக...

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(21) நடைபெறுகிறது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...