follow the truth

follow the truth

April, 24, 2025
Homeஉலகம்சிம்பாப்வேயில் கடும் வறட்சி - 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

Published on

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில் 200 யானைகளைக் கொன்று அதன் இறைச்சியை மக்களுக்கு உணவளிக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் நமீபியாவில் 83 யானைகளை கொல்வதற்கும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறைச்சியை வழங்குவதற்கும் எடுத்த முடிவை ஜிம்பாப்வேயும் பின்பற்றுகிறது.

ஜிம்பாப்வே, ஜாம்பியா, போட்ஸ்வானா, அங்கோலா, நமீபியா உள்ளிட்ட தென்னாப்பிரிக்க நாடுகளில் கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான யானைகள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் உள்ள மொத்த யானைகளில் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது அதிகளவிலான யானைகள் தென்னாப்பிரிக்க பகுதிகளில் தான் வாழ்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவில் மீண்டும் காட்டுத் தீ – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் நியூஜெர்சியின் கொளுத்தும் வெயில் காரணமாக வனப்பகுதியில் காட்டுத்தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காற்றின் வேகம் காரணமாக...

பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்ந்து தக்க பதிலடி கொடுப்பதற்கான...

பாகிஸ்தானியர்கள் இந்தியா செல்வதற்கான விசா இரத்து

பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்திய...