follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1தேர்தல் பணிக்காக 63,000 பொலிசார்

தேர்தல் பணிக்காக 63,000 பொலிசார்

Published on

ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக 63,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாக்கு எண்ணும் நிலையங்கள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொருளாதார நிலையங்களின் பாதுகாப்பிற்காக இராணுவம் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு உதவியாக 10,000 சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும், நடமாடும் பயணங்களுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினத்தன்று வாக்களிப்பு நிலையங்களில் எவரேனும் கலவரமாக நடந்து கொண்டால், அதிகூடிய பலத்தை பிரயோகிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...