follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுடன் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் கலந்துரையாடல்

தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுடன் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் கலந்துரையாடல்

Published on

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று (18) தேர்தல் ஆணைக்குழு வளாகத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையே இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும்.

சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு (ANFRAL) மற்றும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லவுள்ள நிலையில், இன்று தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் இறுதி வாரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...