follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலும் 184 முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலும் 184 முறைப்பாடுகள்

Published on

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலும் 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 184 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வன்முறை தொடர்பான 01 முறைப்பாடுகளும், சட்ட மீறல்கள் தொடர்பான 181 முறைப்பாடுகளும், மேலும் 02 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

அதன்படி, ஜூலை 31 முதல் இன்று வரை பதிவான மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 4215 ஆக அதிகரித்துள்ளது.

பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளில் 3641க்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மேலும் 574 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்

148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக...

இலங்கையின் வௌிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பிற்கு கொள்கை ரீதியில் இணக்கம்

2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன் தனியார் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான...

ஜனாதிபதி தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்...