அனுராதபுரம் மற்றும் காங்கேசன்துறை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட நிலைய அதிபர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
ரயில் சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காததன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் 26 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.