follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP2தனிநபர் வருமான வரி வீதத்தை குறைக்க திட்டம்

தனிநபர் வருமான வரி வீதத்தை குறைக்க திட்டம்

Published on

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போது அறவிடப்படும் தனிநபர் வருமான வரி வீதத்தை குறைப்பதற்கு அமைச்சரவை திட்டமிட்டுள்ளது.

இதுவரை மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டும் நபர்கள் வரிக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் புதிய திருத்தத்திற்கு அமைவாக 150,000 ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டும் நபர்கள் தனிநபர் வருமான வரிக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இதனிடையே 06 வீதம் முதல் 36 வீதம் வரை 06 பிரிவுகளின் கீழ் அறவிடப்பட்ட வரி வீதமும் குறைக்கப்படவுள்ளது.

புதிய திருத்தத்திற்கு அமைவாக 150,000 ரூபா முதல் 200,000 ரூபா வரை தனிநபர் வருமானத்தின் மீது 02 வீத வரி அறவிடப்படவுள்ளது.

200,000 ரூபாவிலிருந்து 300,000 ரூபா வரையான பிரிவுக்கான வரி வீதம் 4.2 ஆக அமைந்துள்ளது.

300,000 ரூபா முதல் 400,000 ரூபா வரை 8.8 வீதமும் 400,000 ரூபா முதல் 500,000 ரூபா வரை 13.5 வீதமும் 500,000 ரூபா 750,000 ரூபா வரை 18 வீதமும் 750,000 ரூபா முதல் 10,000,00 ரூபா வரை 24 வீதமும் 10,000,00 ரூபாவுக்கும் மேற்பட்ட வருமானத்திற்கு 27 வீதமும் தனிநபர் வரி வீதமாக நிர்ணயிக்கப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்களித்த பின்னர் வீட்டிலேயே இருக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குகளைப் பதிவு செய்த பின்னர் அனைத்து வாக்காளர்களையும் வீட்டிலேயே இருக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன்,...

துலிப் சமரவீரவுக்கு 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது

அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் துலிப் சமரவீரவுக்கு கிரிக்கெட் அவுஸ்திரேலியா இருபது...

தேர்தல் பணிக்கு 1,358 பேருந்துகள் தயார்

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் கடமைகளுக்காக 1,358 பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை...