follow the truth

follow the truth

September, 30, 2024
Homeஉள்நாடுஜெனரல் பிபின் ராவத் மறைவு - பிரதமர் இரங்கல்!

ஜெனரல் பிபின் ராவத் மறைவு – பிரதமர் இரங்கல்!

Published on

இந்திய முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்களின் மறைவு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

இதன்போது , இந்திய முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவியார் மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் நேற்று முன்தினம்  இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமை தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும்,

இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த அனைவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் இலங்கை அரசாங்கத்தினதும், மக்களினதும் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் இந்திய-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய ஒரு நண்பர் என்ற வகையில் ஜெனரல் பிபின் ராவத் அவர்களது நினைவு மிக நீண்டகாலமாக நிலைத்திருக்கும் என்றும்  தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முட்டை தொடர்புடைய உணவுப் பொருட்களின் விலையை குறைக்காத வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

முட்டை தொடர்புடைய உணவுப் பொருட்களின் விலை இன்று முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்...

பிரபுக்களின் பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல் இன்று

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (30) விசேட கலந்துரையாடலொன்றுக்கு...

தபால் மூல வாக்களிப்பு : தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

பாராளுமன்ற தேர்தலில், தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் 2024.10.01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2024.10.08ஆம் திகதியுடன்...