follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP2கெஹலியவை மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

கெஹலியவை மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

Published on

நேற்று (11) பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பிலேயே அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 7 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (11) உத்தரவிடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பணிக்கு 1,358 பேருந்துகள் தயார்

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் கடமைகளுக்காக 1,358 பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை...

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும்...

தேர்தலுக்கு ஆணைகுழு தயார்

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும்...