follow the truth

follow the truth

April, 9, 2025
HomeTOP2தற்போதைய மக்கள் அரசியல் பேரங்களுக்கு ஏமாற்றப்பட மாட்டார்கள் - சஜித்

தற்போதைய மக்கள் அரசியல் பேரங்களுக்கு ஏமாற்றப்பட மாட்டார்கள் – சஜித்

Published on

இந்த நாட்டின் தற்போதைய மக்கள் அரசியல் பேரங்களுக்கு ஏமாற்றப்பட மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பல்வேறு சதிகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இரண்டாவது விருப்பு வாக்கு என்பது இல்லை. முதல் சுற்றிலேயே ஐக்கிய மக்கள் சக்தி செல்வது உறுதி. அந்த அரசியல் வியாபாரிகளின் கேவலமான ஒப்பந்தங்களுக்கு இந்த நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். உங்களால் ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்க முடியவில்லையா என்று நான் ஜனாதிபதியிடம் கேட்கிறேன். அநுரவுடனான போலி ஒப்பந்தத்திற்கு பதிலாக கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை ஒன்றினை எடுங்கள். நான் உறுதியளிக்கின்றேன் 21 வெற்றியின் மூலம் கடவுச்சீட்டு வரிசைக்கான காரணத்தினை மக்களுக்கு வெளிப்படுத்துவேன்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேர்வின் சில்வா ஏப்ரல் 21 வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான்...

கோசல நுவனுக்கு பதிலாக சமந்த ரணசிங்க

கோசல நுவன் ஜயவீர காலமானதால் வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சமந்த...

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 40,000 வழக்குகள் நிலுவையில் – விசாரணைகளை துரிதப்படுத்த திட்டம்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. சிறுவர்...