follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP2அநுரவுக்கு சுகயீனம் : மருத்துவ ஆலோசனைப்படி ஓய்வு

அநுரவுக்கு சுகயீனம் : மருத்துவ ஆலோசனைப்படி ஓய்வு

Published on

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அநுர குமார திஸாநாயக்க சற்று சுகயீனமடைந்துள்ளதாகவும் வைத்திய ஆலோசனையின் பிரகாரம் ஒரு நாள் ஓய்வு எடுப்பதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த டில்வின் சில்வா;

“.. இந்த கூட்டத்திற்கு நான் உண்மையில் வர விரும்பவில்லை. நான் இன்று பதுளைக்குச் செல்லவிருந்தேன், பதுளையில் பல பொதுக் கூட்டங்கள் இருந்தன. ஆனால் இன்று எமது தோழர் அநுர குமார திஸாநாயக்க இங்கு வரமாட்டார் என்பதனால் பதுளை செல்வதை நிறுத்திவிட்டு இங்கு வந்தேன்.

கவலைப்பட ஒன்றுமில்லை. ஏனெனில் அண்மைக்காலமாக தோழர் அநுர மிகவும் களைப்பாகவும் தூக்கத்துடனும் இருந்ததால் இந்த வைரஸ் காய்ச்சலால் அவர் நோய்வாய்ப்பட்டுள்ளார். அப்போதும் அவர் வேலை செய்தார். இன்று உடம்பு களைப்பு கொஞ்சம் அதிகமாகிவிட்டது.

எனவே, தோழர் அநுரவுக்கு ஓய்வு வழங்குமாறு வைத்தியர்கள் எமக்கு கடுமையாக கோரிக்கை விடுத்தனர். பிறகு நாளை முதல் வேலை செய்யலாம்.

தோழர் அநுர இன்று சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு நாளை முதல் இந்தப் பணியில் ஈடுபட விரும்புகிறார்..”

நேற்று (07) தெய்யந்தரவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே டில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...