follow the truth

follow the truth

April, 22, 2025
HomeTOP2ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

Published on

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே உள்ளனர்.

இரு விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டதால், அதில் வீரர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புவது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்பட்டது.

இதனால், அவர்களின் எட்டு நாட்கள் பயணம் எட்டு மாதங்களாக நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்டார்லைனர் பூமிக்குத் திரும்புவதற்கு 6 மணிநேரம் எடுத்தது.

தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்ததால் இந்த விண்கலத்தின் மூலம் அவர்களை பூமிக்குக் கொண்டு வருவது பாதுகாப்பானதா என்ற சந்தேகம் எழுந்தது. பின்னர் அந்த இரண்டு விண்வெளி வீரர்களும் இன்னும் சில மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலே தங்கியிருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர் நிறுத்த பேச்சுக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அறிவிப்பு

2022ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் தற்போது நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில்,...

ஜே.வி.பி அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளை வழங்கும் அரசியலால் வளமான நாடு சீரழிகிறது – சஜித்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளை வழங்கும் அரசியலால் இன்று வளமான நாட்டையும்...

வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...