follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுஹிஜாஸ் ஹிஸ்புல்லாக்கு எதிராக ஆட்சேபனைகள் தாக்கல்!

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாக்கு எதிராக ஆட்சேபனைகள் தாக்கல்!

Published on

தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிக்கக் கோரி முன்வைத்துள்ள மறுசீரமைப்பு விண்ணப்பத்திற்கு எதிராக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

குறித்த மனு மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவெல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு இன்று காலை எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஹிஸ்புல்லாவின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகளின் கீழ் புத்தளம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர், தமக்கு கட்சிக்காரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளமையை சுட்டிக்காட்டினார்.

எனினும் பயங்கரவாத தடைச் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்டவரை பிணையில் விடுவிக்க தமக்கு அதிகாரம் இல்லை என்று புத்தளம் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளதாக ரொமேஸ் டி சில்வா குறிப்பிட்டார்.

இந்தநிலையில் தமது கட்சிக்காரருக்கு பிணை வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது இந்த மனு தொடர்பில் தாம், ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளதாக சட்டமா அதிபரின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், மனுவின் விசாரணையை எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business...

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

தபால் மூலம் வாக்களிப்போருக்கான அறிவித்தல்

தபால் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.