follow the truth

follow the truth

April, 22, 2025
HomeTOP1“SPOT PAID” மூலம் வாகனங்களுக்கான தண்டப்பணம் அறவீடு

“SPOT PAID” மூலம் வாகனங்களுக்கான தண்டப்பணம் அறவீடு

Published on

வாகனங்கள் தொடர்பான செயற்பாடுகள் மற்றும் தண்டப்பணம் அறவிடும் செயற்பாடுகளை தொழில்நுட்பமயப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தாா்.

அநேகமான சந்தர்ப்பங்களில் தண்டப்பணம் செலுத்தி தனது வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள இரண்டு அல்லது மூன்று நாட்கள் செல்கின்றன. அதனால், “SPOT PAID” என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த முறையின் மூலம் தண்டப்பணம் அறவிடப்பட்ட சந்தர்ப்பத்திலேயே தமது கடன்அட்டை அல்லது வேறு முறையில் தண்டப்பணத்தை செலுத்திவிட்டு வாகன அனுமதிப்பத்திரங்களை உடனடியாக பெற்றுக்கொள்ளக் கூடிய புதிய முறையை உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டாா்.

அதேபோன்று, தவறு இழைக்கப்படும் சந்தர்ப்பத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யும் நடைமுறையும் இருக்கிறது. கடந்த 10 வருடங்கள் வீதி விபத்துகளினால் 27,000 போ் உயிரிழந்துள்ளனா். இந்த வருடத்தில் நேற்று வரையான காலப்பகுதியில் மாத்திரம் வீதி விபத்துகளில் 2,000 போ் வரையில் உயிரிழந்துள்ளனா்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், போதைப்பொருட்களுடன் வாகனங்களை செலுத்துதல், அதிவேகமாக வாகனங்களில் பயணித்தல் போன்ற காரணங்களினால் இந்த விபத்துகள் இடம்பெறுகின்றன.

சாரதியொருவர் தவறு இழைக்கும்போது அவரது வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்தால் ஓரளவு விபத்துகளை குறைத்துக்கொள்ள கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business...

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

தபால் மூலம் வாக்களிப்போருக்கான அறிவித்தல்

தபால் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.