follow the truth

follow the truth

April, 18, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாவிவசாய மக்களுக்கு சஜித் பிரேமதாச அழைப

விவசாய மக்களுக்கு சஜித் பிரேமதாச அழைப

Published on

விவசாயிகளுக்கு தேவையான சிறந்த தரத்திலான 50 கிலோ கிராம் எடையுள்ள உரம் மூடை ஒன்றை 5000 ரூபாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய இரசாயன மருந்துகள், உரம் என்பனவற்றுக்கு ஒழுங்கு முறையான விலை நிர்ணயத்தை மேற்கொண்டு, இருட்டடிப்புச் செய்கின்ற வர்த்தகர்களின் விலை அதிகரிப்புக்கு இடமளிக்காது, மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமான விலைக்கு பொருட்கள் வழங்கப்படும். உர வினியோகத்தின்போது கம நல சேவைகள் மத்திய நிலையத்தை மையமாகக் கொண்டு வெளிப்படை தன்மையுடன் இந்த வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

QR Code முறையை மையப்படுத்தி விவசாயிகளுக்கு, மீன்பிடித் தொழிலாளர்களுக்கு, முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு, பாடசாலை போக்குவரத்து சேவையாளர்களுக்கு, ஆலையுரிமையாளர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கப்படும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா அச்சுறுத்தல், உர மோசடி, நானோ உர மோசடி போன்றவற்றின் ஊடாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தம்மிடம் உள்ள பணத்தைக் கொண்டும் தங்க ஆபரணங்களை அடகு வைத்து, கிடைக்கின்ற பணத்தை கொண்டும் விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு கடந்த காலங்களில் அடிக்கு மேல் அடி விழுந்து அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். அவ்வாறு அழுத்தங்களுக்கு உள்ளாகி மூன்று வேலையும் உணவு உண்ண முடியாமல் இருக்கின்ற விவசாயிகளின் விவசாய கடனை இரத்து செய்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்தோடு விவசாயிகளின் விவசாய உற்பத்திகளுக்கு நியாயமான நிர்ணய விலை ஒன்று பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். மோசடியான முறையில் விவசாயிகளையும் நுகர்வோர்களையும் பாதிக்கின்ற ஏற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது.

நுகர்வோருக்கும் சாதாரண விலையில் பொருள் கிடைப்பதோடு நெல்லுக்கும் உயர்ந்த நிர்ணய விலை ஒன்றை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பதின்நான்காவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (25) பொலன்னறுவை, ஹிங்குராங்கொட நகரில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

பிணைகள் இன்றி அரச வங்கிகளில் கோடிக்கணக்கான தொகையை கடனாகப் பெற்றுக் கொண்டுள்ள செல்வந்தர்கள், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களோடு நட்புறவைப் பேணி அந்தக் கடன் தொகைகளை இரத்துச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் விவசாயிகளின் கடன்களை இரத்து செய்ய அரசாங்கத்தால் முடியாமல் போயுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக நாட்டுக்கு உணவளிக்கின்ற விவசாயிகளுக்கு நன்றி உணர்வாக இந்தக் கடன்களை இரத்து செய்வோம். இந்த சிறிய மனிதர்களின் ஜனாதிபதி என்ற வகையில் அந்தப் பணியை நிறைவேற்றுவேன். நாட்டுக்கு உணவு அளிக்கின்ற விவசாயிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், என்னை ரௌடி என அழைப்பது மகிழ்ச்சி

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என்று கடற்றொழில் மற்றும் நீரியல்,...

திருடர்களை தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்திப் பிடித்தால் பொருளாதாரம் சரிந்துவிடும் – விஜித ஹேரத்

திருடர்களைப் பிடித்து மோசடி செய்பவர்களைத் தண்டிக்க முழு அரசாங்கத்தின் சுமையும் பயன்படுத்தப்பட்டால், பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வாய்ப்பு உள்ளது என்று...

அமெரிக்க வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் 28 நாடுகளில் இலங்கை இல்லையாம்

அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ள புதிய இறக்குமதி வரிகளில் இருந்து, உலகின் மிகவும் ஏழை மற்றும் சிறிய நாடுகளை விலக்க...