follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகல்முனை மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Published on

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட கல்முனை மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 15 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையில் 2 ஆசனங்கள் வெற்றிடமாகவுள்ள நிலையில், 39 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 21 உறுப்பினர்களும், 6 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

5 உறுப்பினர்கள் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது நடுநிலை வகித்ததுடன், 7 பேர் சபைக்குச் சமூகமளித்திருக்கவில்லை.

இதனடிப்படையில், கல்முனை மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 15 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...