follow the truth

follow the truth

April, 21, 2025
Homeஉலகம்மியன்மாரில் இராணுவத்தினரின் கோரத்தாண்டவம்: 11 பேரை உயிருடன் எரித்துக் கொலை

மியன்மாரில் இராணுவத்தினரின் கோரத்தாண்டவம்: 11 பேரை உயிருடன் எரித்துக் கொலை

Published on

மியன்மாரில் இராணுவத்தினர் கிராமம் ஒன்றுக்குள் புகுந்து 11 பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள. எனினும், இது குறித்து அந்நாட்டு இராணுவம் விளக்கம் எதுவும் வழங்கவில்லை எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மியன்மாரில் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி அந்த நாட்டு இராணுவம் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வரும் இராணுவம், இதுவரை 1,300-க்கும் அதிகமான போராட்டக்காரர்களை சுட்டுக் கொலை செய்துள்ளது. இந்நிலையில், இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வரும் அதே வேளையில் ஒரு சிலர் இராணுவத்துக்கு எதிராக ஆயுதத்தை ஏந்தி போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் மியன்மாரின் வடமேற்கு பகுதியில் உள்ள மோனிவா நகரில் அணிவகுத்து சென்ற இராணுவ வாகனங்கள் மீது சிலர் கையெறி வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து, இராணுவ வீரர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதன்போது கிராமத்தினர் 11 பேரை இராணுவ வீரர்கள் உயிரோடு எரித்துக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் மியன்மாரில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது குறித்து இராணுவம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. முன்னதாக கடந்த 5ம் திகதி யாங்கூன் நகரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது இராணுவ வாகனம் மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீனாவில் 10G இணைய சேவை அறிமுகம்

பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி, தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. உலகின் முதல் 10ஜி இணைய...

பாப்பரசர் பிரான்சிஸ் இறையடி சேர்ந்தார்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானதாக காணொளி அறிக்கையொன்றின் ஊடாக வத்திகான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சுகயீனம்...

டிரம்பின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிரானவை – வலுக்கும் போராட்டம்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அதில் வெளிநாட்டவர் வலுக்கட்டாய வெளியேற்றம்,...