follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2பணக்கார வேட்பாளர் திலித், ஏழை வேட்பாளர் ரணில்

பணக்கார வேட்பாளர் திலித், ஏழை வேட்பாளர் ரணில்

Published on

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் அதிக மாத வருமானம் கொண்ட வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆவார்.

தாயக மக்கள் கட்சியில் இருந்து இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வர்த்தகர் திலித் ஜயவீரவின் மாத வருமானம் 16,500,000 ரூபா என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது. திலித் ஜயவீர இலங்கையில் ஒரு பிரபலமான வர்த்தகர் மற்றும் அவரது வணிகங்களில் ஒன்று இலங்கையில் பிரபலமான ஊடக நிறுவனமாகும்.

இரண்டாவது அதிகூடிய மாதாந்த வருமானம் ஜனாதிபதியின் சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ எனவும் அவரது மாத வருமானம் 1,345,000 ரூபா எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜேதாச ராஜபக்ஷ முழுநேர அரசியல்வாதி என்பதுடன், வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அத்துடன், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளராகக் கருதப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மாதாந்த வருமானம் 454,285 ரூபா எனவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் மாத வருமானம் 295,681 ரூபாவாகும்.

அத்துடன், தேசிய மக்கள் படையின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவின் மாத வருமானம் 256,802 ரூபாவாகவும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மாத வருமானம் 317,785 ரூபாவாகவும், மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சட்டத்தரணி நுவான் போபகே, 3 லட்சம் ரூபாயும் மாத வருமானமாகவும் குறித்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மாத வருமானம் 179 691.66 என்றும் குறித்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது தேர்தல் ஆணைக்குழுவிடம் தமது சொத்துக்கள் மற்றும் கடன்களை சமர்ப்பிக்க வேண்டிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா...

இனவாதத்தினை தோற்கடிக்க புதிய சட்டங்களையாவது உருவாக்க தயங்க மாட்டோம் – ஜனாதிபதி

இனவாதத்தை தோற்கடிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டேனும் நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்படாது என்று...

ஜனாதிபதியின் உரையினை விமர்சிக்க எவனுக்கும் உரிமையில்லை – பிமல் ரத்நாயக்க

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் உரையை விமர்சிக்க தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்க் கட்சிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது...