follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP1போராட்டக்காரர்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

போராட்டக்காரர்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

Published on

இணை சுகாதார பட்டதாரிகளின் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவை என்பன இணைந்து இன்று (22) நடத்தவுள்ள போராட்டம் தொடர்பில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருதானை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இணை சுகாதார பட்டதாரிகளின் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுகாதார அமைச்சின் சுற்றுவட்டார வீதிகளில் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என மாளிகாகந்த நீதிமன்றில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. .

இதன்படி, இன்று காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஒன்று கூடி அதனைச் சூழவுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் நடைபாதைகளை பாவனைக்கு பயன்படுத்த முடியாதவாறு மறித்து போராட்டம் நடத்துவதற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 5 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 5 பேர் உயிரிழந்ததோடு, 14,678 டெங்கு நோயாளர்கள் அடையாளம்...

“ஸ்ரீ தலதா வழிபாடு” – சமூக ஊடகங்களில் பரவும் போலி அழைப்பிதழ்

“ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் பங்கேற்குமாறு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் அழைப்பிதழ் போலியாக உருவாக்கப்பட்டது...

“ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வு – இராஜதந்திரிகள் கண்டிக்குப் பயணம்

16 வருடங்களின் பின்னர் இம்முறை இடம்பெறும் “சிறி தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று...