follow the truth

follow the truth

April, 9, 2025
HomeTOP2சமுர்த்தி உத்தியோகத்தர்களது நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு

சமுர்த்தி உத்தியோகத்தர்களது நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு

Published on

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நீண்டகாலமாக நிலவும் தொழில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நிதியமைச்சு கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஸ்தாபனத்தின் போது புதிய சேவை அதிகாரிகளாக உள்வாங்கப்பட்ட 3027 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பாதிக்கும் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த 3027 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆரம்பகால சேவை அதிகாரிகளாக கருதப்படுவதற்கு இரண்டாவது சந்தர்ப்பம் வழங்குவதற்கான தொழில்சார் தீர்வு வழங்கப்பட்டதாகவும், இதனால் அவர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த இப்பிரச்சினைக்கு தீர்வு காண நிதியமைச்சின் இணக்கம் காணப்பட்டமை சாதகமான நிலை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளையான் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.    

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி...

மஹிந்த சிறிவர்தன எழுதிய நூல் ஜனாதிபதிக்கு கையளிப்பு

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன எழுதிய “ Sri Lanka’s Economic Revival” Reflection on the...