follow the truth

follow the truth

April, 21, 2025
HomeTOP2இரண்டு மாதங்களாக ஸ்கேன் மற்றும் MRI இயந்திரங்களில் கோளாறு

இரண்டு மாதங்களாக ஸ்கேன் மற்றும் MRI இயந்திரங்களில் கோளாறு

Published on

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 02 ஸ்கேன் இயந்திரங்களும் 02 எம்.ஆர்.ஐ இயந்திரங்களும் தொழிநுட்பக் கோளாறினால் பாதிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இயந்திரங்கள் இதுவரை சீர் செய்யப்படவில்லை என அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

இதன் காரணமாக சிகிச்சைக்காக வரும் நோயாளர்களின் சத்திரசிகிச்சை மற்றும் சிகிச்சை சேவைகள் தடைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயந்திரம் ஒன்றை பழுது பார்ப்பதற்காக ஜப்பானில் இருந்து குழுவொன்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குமார விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய இயந்திரங்களுக்கு தேவையான சில பாகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business...

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

தபால் மூலம் வாக்களிப்போருக்கான அறிவித்தல்

தபால் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.