follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉலகம்ஆப்பிரிக்காவில் ஆட்டம்காட்டும் குரங்கு அம்மை தொற்று

ஆப்பிரிக்காவில் ஆட்டம்காட்டும் குரங்கு அம்மை தொற்று

Published on

ஆப்பிரிக்க நாடுகளில் பரவும் ‘Mpox’ அல்லது ‘குரங்கு அம்மை’ வைரஸ் தொடர்பாக அவசர நிலையை பிரகடனப்படுத்த உலக சுகாதார நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

‘Mpox’ அல்லது ‘குரங்கு அம்மை’ பரவுவது உலகளாவிய பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.

ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது ‘Mpox’ என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வகை பயங்கரமானது என்று கூறப்படுகிறது. புதிய திரிபு 13 நாடுகளுக்கு பரவியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

கொங்கோ ஜனநாயக குடியரசில் மட்டும் குரங்கு அம்மை தொற்றினால் 450 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

புருண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகண்டா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் ‘Mpox’ என்ற புதிய விகாரம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் ‘Mpox’ என்ற புதிய விகாரம் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். உலகளாவிய ஆபத்தை உருவாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தனது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளார்.

‘குரங்கு அம்மை’ வைரஸ் முதன்முதலில் 1958 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க குரங்குகளின் உடலில் இருந்து கண்டறியப்பட்டது. அதனால்தான் இதற்கு ‘குரங்கு அம்மை’ என்று பெயர்.
குரங்குகள் மட்டுமின்றி, எலி, அணில் போன்ற பாலூட்டிகள் மூலமாகவும் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. ‘குரங்கு அம்மை’ என்பது சிக்கன் குனியா போன்றது.

குரங்கு அம்மை தொற்றின் முக்கிய அறிகுறி காய்ச்சல் மற்றும் தோல் கொப்புளங்கள் ஆகும்.

‘குரங்கு அம்மை’ ஒரு தீவிர நோய் அல்ல, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து நோய் விரைவில் குணமாகலாம் அல்லது சிக்கல்களை உருவாக்கலாம். ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களுக்கு ‘குரங்கு அம்மை’ வைரஸ் பரவுவது பொதுவானது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...