follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2ராஜபக்ஷவை எதிர்த்தவர்களுக்கு சரிப்பட்டு வராது - ஜோன்ஸ்டன்

ராஜபக்ஷவை எதிர்த்தவர்களுக்கு சரிப்பட்டு வராது – ஜோன்ஸ்டன்

Published on

பொதுஜன பெரமுனவின் அங்குரார்ப்பண பேரணி எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் மக்கள் வருவார்கள் அதற்கு எல்லாம் தயாராக உள்ளது என்றார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக செயற்பட்டவர்கள் அரசியல் ரீதியாக தலை தூக்க முடியாது. அதேபோன்றதொரு விடயம் இன்று சுதந்திரக் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் அடிமட்ட மக்கள் ஒன்று கூடியுள்ளதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அணுகிய சிலர் மீண்டும் கட்சிக்கு வருமாறு பேசியதாகவும் அவர் கூறினார். ரணில் விக்கிரமசிங்க மிகக் குறைந்த வாக்குகளுக்கு வீழ்ச்சியடைவார் என்றும் அவர் கூறினார்.

பொதுஜன பெரமுன ஒரு இளம் ஜனாதிபதி வேட்பாளரை முன்வைத்துள்ளதாகவும், அவரைச் சுற்றி அனைவரும் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு நடந்தது போல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச்...