follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுகுடிநீர் திட்டம் - வீடமைப்பு திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

குடிநீர் திட்டம் – வீடமைப்பு திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

Published on

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று(07) பாராளுமன்ற குழு கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

குறிப்பாக அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கட்டுவன பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரிதிகஹாய, சியராபிட்டிய, வெலிபிட்டிய, மித்தெனிய ஆகிய பகுதிகளுக்கு காகிரியோபடை நீர் திட்டத்தின் மூலம் நீரைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களால் பிரேரனை கொண்டுவரப்பட்டது.

மேலும் உத்தேச தலகம சௌபாக்ய குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அம்பேபுஸ்ஸ, தலகம சௌபாக்ய சமூக அடிப்படையிலான அமைப்பு விடுத்த கோரிக்கை தொடர்பில் கவணம் செலுத்தப்பட்டது.

பத்தேகம பிரதேச செயலகப் பிரிவின் பலகொட சந்தியிலிருந்து ஆரம்ப சந்தி வரை இயங்கும் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குருந்துஹேன 08ஆம் கட்டை, அதுரத்வில, குருந்துஹேன பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு குடிநீர் வழங்குமாறு மேற்கொண்டுவந்த கோரிக்கை தொடர்பிலும் கரிசினைக் காட்டப்பட்டது.

தற்போது செயலிழந்துள்ள “காலி கழிவு நீர் முகாமைத்துவத் திட்டத்தை” நடைமுறைப்படுத்துவதில் உள்ள தற்போதைய நிலைமை, எதிர்கால முன்னேற்றம், தடைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் குருநாகல் நகரத்தை அன்மித்த பிரதேசத்தில் நிர்மானிக்கவிருக்கும் இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பாகவும் இக்குழு கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு மன்னார், மாந்தை பெரியமடு ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்று வரும் நீர் வழங்கல் திட்டத்தின் தாமதம் பற்றியும் வினா எழுப்பப்பட்டது. இதன்போது இத்திட்டம் வெகுவிரைவில் பூர்த்தி செய்து மக்களின் பாவனைக்கு கையளிப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த பாராளுமன்றக் குழு கூட்டத்தில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், அமைச்சர் மகிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ராமேஸ்வரன், ரவூப் ஹக்கீம், மாயாதுன்னா சிந்தக அமல், சிரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சந்திம வீரகொடி, மஞ்சுலா திசாநாயக்க அமைச்சின் செயலாளர், நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகள் உட்பட மேலும் பல உத்தியோகஸ்த்தர்கள் கலந்துக்கொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...