follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுசிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச்சென்ற 5 சிறுமிகள்

சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச்சென்ற 5 சிறுமிகள்

Published on

கண்டி வத்தேகம – மீகம்மன பிரதேசத்தில் உள்ள சிறுவர் புனர்வாழ்வு இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற ஐந்து சிறுமிகளை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஐந்து சிறுமிகளும் நேற்று நண்பகல் சிறுவர் இல்லத்திற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்கள் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சிறுமிகள் புஸ்ஸல்லாவ, வத்தேகம மற்றும் உடிஸ்பத்துவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த சிறுமிகளில் ஒருவர் நாவலப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் தங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...