follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுஐ. ம. ச எம்.பிக்கள் இன்று முதல் நாடாளுமன்ற அமர்வில்

ஐ. ம. ச எம்.பிக்கள் இன்று முதல் நாடாளுமன்ற அமர்வில்

Published on

நாடாளுமன்றத்தில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினர் கடந்த இரண்டு தினங்களாக சபை அமர்வுகளை புறக்கணித்திருந்த நிலையில் இன்றைய தினம் வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆளுந்தரப்பு உறுப்பினர்களின் அச்சுறுத்தலை அடுத்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பிரதான எதிர்க்கட்சியினர் சபை அமர்வுகளை புறக்கணித்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று பிற்பகல் சபாநாயகருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையே விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, கயந்த கருணாதிலக, முஜிபூர் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் சந்தித்திருந்தனர்.  மேலும் இன்று முதல் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அவர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...