எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தீர்மானித்துள்ளார்.
இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“மக்கள் விடுதலை முன்னணிக்கு இந்த நாட்டைக் கொடுப்பதா? காலை என்ன பேசுவது மாலை என்ன பேசுவது என்று தெரியாத சஜித்துக்கு இந்த நாட்டை 22ம் திகதி கொடுப்பதா? இந்தத் தலைவர்களுக்கு நாட்டினை கொடுப்பதா?? நாட்டிற்காக முடிவெடுப்பதா?? நாட்டிற்காக செவி சாய்த்து நான் உங்கள் கருத்தைக் கேட்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டத்திற்கு நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன்..”