கந்தானை உப நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு இன்று(07) இலங்கை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கொவிட் ரெபிட் ஆன்டிஜென் பரிசோதனையில், நிலையத்தில் பணிபுரியும் துணை ரயில் நிலைய பொறுப்பதிகாரி ஒருவருக்கு கொவிட் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதனால் குறித்த நிலையத்தை தற்காலிகமாக மூடுவதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளது.
ரயில் நிலையத்தை கிருமி நீக்கம் செய்து மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.