நாடளாவிய ரீதியில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 600 எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன இதுகுறித்து உரியவாறு விசாரணைகளை முன்னெடுப்பதுடன் குற்றமிழைத்த தரப்பினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.