follow the truth

follow the truth

April, 18, 2025
Homeஉலகம்காஸாவில் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம்

காஸாவில் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம்

Published on

பலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

போரால் உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் காஸா மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் காஸாவில் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, காஸாவில் கழிவுநீர் மாதிரிகளில் தொற்று நோய் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது.

உலக சுகாதார நிறுவனம் காஸாவிற்கு 1 மில்லியன் போலியோ தடுப்பூசிகளை அனுப்புகிறது. தடுப்பூசிகள் குழந்தைகளைச் சென்றடைவதை உறுதி செய்ய போர் நிறுத்தம் தேவை என்றார்.

காஸாவின் சுகாதார அமைச்சகம் கூறும்போது, போலியோ தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து

தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு தாய்லாந்து பொலிஸ் முதன்முறையாக   தனது முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திர பொலிஸ்...

சூரிய மண்டலத்துக்கு அப்பால் உயிர்கள் வாழும் உறுதியான ஆதாரங்கள்

சூரிய மண்டலத்துக்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்களை கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவியுடன்...

தூதரகங்கள் மற்றும் துணைத்தூதரங்கள் சிலவற்றை மூடுவதற்கு ட்ரம்ப் நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 30 நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்து...