follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP2பொஹட்டுவவில் இருந்து பிரிந்து வஜிரவின் வீட்டிற்கு திரண்ட எம்பிக்களும் அமைச்சர்களும்

பொஹட்டுவவில் இருந்து பிரிந்து வஜிரவின் வீட்டிற்கு திரண்ட எம்பிக்களும் அமைச்சர்களும்

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 75 அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் நேற்று(29) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவின் கொழும்பு வீட்டிற்கும் கட்சி அலுவலகத்திற்கும் சென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.

இந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களில் பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, காஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரன, கனக ஹேரத், ஜனக வக்கம்புர, மொஹான் பிரதர்ஷன ஆகியோர் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பொதுஜன பெரமுனவில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான நூற்றைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன தனியான ஜனாதிபதி வேட்பாளரை முன்வைப்பதற்கான தீர்மானத்துடன், ஜனாதிபதிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவை தெரிவிக்கத் தயாராக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பயணமும் வேகமெடுக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், என்னை ரௌடி என அழைப்பது மகிழ்ச்சி

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என்று கடற்றொழில் மற்றும் நீரியல்,...

புத்தாண்டு காலத்தில் பஸ் சேவைகள் குறித்து இதுவரை 187 முறைபாடுகள்

சித்திரை புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவைகள் குறித்து பயணிகளிடமிருந்து 187 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

தேர்தல் தொடர்பில் இதுவரை 176 முறைப்பாடுகள் பதிவு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல்...