follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP2மரமும் மயிலும் ஆதரவு யாருக்கு?

மரமும் மயிலும் ஆதரவு யாருக்கு?

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்குக் காரணம், அந்தக் கட்சி ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுகிறது.

எனினும், தமது கட்சி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் கட்சியின் உயர்பீடம் கூடி கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் “அத தெரண”விற்கு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது ஆதரவு தொடர்பிலும் மௌனமாகவே இருந்து வருகிறது.

கடந்த 27ம் திகதி இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தள மாவட்ட எழுச்சி மாநாட்டில் கூட புத்தள அரசியல் குறித்தே கட்சியின் தலைமை பேசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்

148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக...

02 நாட்களுக்கு மதுபான சாலைகளை மூட தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால்...

வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் – வீடியோ எடுத்தல் தடை

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ...