follow the truth

follow the truth

September, 29, 2024
Homeஉள்நாடுஅடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்க அமைச்சரவை அனுமதி

அடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்க அமைச்சரவை அனுமதி

Published on

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் அடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்காலத்தில் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும்போது இந்த அடையாள இலக்கம் வழங்கப்படும்.

இந்த அடையாள இலக்கத்தை, தேசிய அடையாள அட்டையை தயாரிக்க பயன்படுத்துவதற்கும், பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து செயல்பாடுகளின்போது, பொது மற்றும் தனியார் துறை சேவைகளை அணுகுவதற்கும் வசதியாக இருக்கும்.

முன்னதாக, ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அடையாள இலக்கங்களை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இனிவரும் காலங்களில் பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கும் அதற்கான அங்கீகரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆட்பதிவுத் திணைக்களத்தின் தகவல் தொகுதி மூலம் இணையவழி ஊடான இலங்கை அடையாள இலக்கத்தை பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கு வழங்குவதற்கும், குறித்த இலக்கத்தை உள்ளடக்கி பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மூலம் குறித்த நபர்களின் பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

நாட்டின் தென்கிழக்கு கடற் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல்...

அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத்

அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் குறித்த நியமனம் செய்யப்பட்டதாக...

புலமைப்பரிசில் பரீட்சை சிக்கலுக்கான இறுதி தீர்மானம்

இந்த ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு, பரீட்சைக்கு முன்னர் கலந்துரையாடப்பட்டதாக இனங்காணப்பட்ட...