ராஜபக்ஷவின் ஆசியுடன் வரும் எவருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடுவெல விகாரையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாட்டளி ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொஹட்டுவ என்பது பொஹட்டுவ உறுப்பினர்கள் அல்ல. ராஜபக்ஷ குடும்பம். ஏனெனில் ராஜபக்ஷ குடும்பம் நாட்டை திவாலாக்கும் வகையில் உச்ச நீதிமன்றில் தண்டிக்கப்பட்டுள்ளனர் எனவும் பாட்டளி மேலும் தெரிவித்தார்.