follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP2அமைச்சர் விஜயதாச உள்ளிட்டோருக்கு அழைப்பாணை

அமைச்சர் விஜயதாச உள்ளிட்டோருக்கு அழைப்பாணை

Published on

ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் விளக்கமறியலில் உள்ள சிறைக்கைதிகள் வாக்களிப்பதற்கு வசதிகளை செய்துகொடுக்கும் செயன்முறைகளை வெளியிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நீதிமன்றில் விளக்கமளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பிற்கு உயர் நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

விளக்கமறியலில் உள்ள சிறைக்கைதிகளுக்கு வாக்குரிமையை வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் சிறைக்கைதியான சுதேஷ நந்திமால் டி சில்வா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே உச்ச நீதிமன்றத்தினால் மனுதாரர் தரப்பு சட்டத்தரணிக்கு இந்த உத்தரவை வழங்கியது.

இதற்கமைய மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினர் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி மன்றில் விளக்கமளிக்க வேண்டுமென குறிப்பிட்டு அழைப்பாணை விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை தாண்டியது

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

காலி ஹோட்டலில் தாக்குதல் – பொலிஸ் விசாரணை

காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நேற்று இரவு(16) ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக...

16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” நாளை முதல் ஆரம்பம்

16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “சிறி தலதா வழிபாடு” நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு, நாளை (18)...